Infotainment
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log inLog in  

 

 மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - காதலோ காதல்

Go down 
AuthorMessage
Jammy
Newbee
Jammy


Virgo Posts : 16
Join date : 2010-11-28
Age : 33
Location : Chennai

மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - காதலோ காதல் Empty
PostSubject: மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - காதலோ காதல்   மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - காதலோ காதல் EmptySun Dec 05, 2010 1:24 am

காதலோ காதல்


கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு துளிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5

ஒன்றே யதுவாய் உலகமெலாந்தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
நாளொன்று போயினது; நானு மெனதுயிரும், 10

நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்,
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், 15

புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் 20

சென்றுநான் பார்க்கையிலே செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்
மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25

காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்.

நன்றி - சென்னை நூலகம்.காம்

ஜமுனா
Back to top Go down
 
மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - காதலோ காதல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - குயில் பாட்டு
» மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - 2. குயிலின் பாட்டு
» மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள் - குயிலின் காதற் கதை
» காதல் கவிதைகள் - வலியும் சுகம் தானே

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: